பிஜேபி கட்சியினரின் மனதில் என்னதான் இருக்கிறது?
பிஜேபி கட்சியினரின் மனதில் என்னதான் இருக்கிறது? வேளாண் சட்டங்கள், கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள், ஜி எஸ்டி, நீட், அரசு நிறுவனங்கள் தனியார்மயம் . . .
ஒரு சிறிய தேடல் மோடியையும் அமித் ஷாவையும் கடந்து நம்மை சுப்பிரமணியன் ஸ்வாமியிடம் கொண்டு போய் நிறுத்தும்.
சுப்பிரமணியன் ஸ்வாமி ராக்பெல்லர் ஸ்காலர்ஷிப்பில் ஹாவர்டில் படிக்கிறார். அங்கேயே பேராசியராகவும் இருக்கிறார். பின்பு இந்தியா திரும்புகிறார். வணிகத்தின் மீது அரசு கட்டுப்பாடுகளத் தளர்த்துவது, அணுகுண்டுக்கு ஆதரவு என்று அவரது நிலைபாடுகள் அவரை இந்துத்துவவாதிகளுக்கு நெருக்கமாக்குகின்றன.
முப்பதியொரு வயதேயான ஸ்வாமியை ஜனசங்கிற்கான பொருளாதார திட்டத்தை உருவாக்கித் தரும்படி ஆர். எஸ்.எஸ் கேட்டுக் கொள்கிறது. அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது, ஃப்ரீ மார்க்கெட் ஆகியவற்றுக்கு ஆதரவாக அவர் தயாரித்த திட்டம் தேச பக்தி கோஷத்துக்கு ஏற்ற வகையில் ஸ்வதேஷி திட்டம் என்று பெயரிடப்படுகிறது.
இந்திரா காந்தி சர்வ வல்லமை வாய்ந்த அரசு என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தார். மும்பை தொழிலதிபர்கள் இதற்கு எதிரான நிலை கொண்டிருந்தனர். அதுவரை கடைக்காரர்கள், வணிகர்கள், ராஜ்மாதா சிந்தியா உள்ளிட்ட முன்னாள் மன்னர்கள் போன்றோரின் ஆதரவை மட்டும் கொண்டிருந்த ஜன சங் இந்தத் தொழிலதிபர்களின் ஆதரவைப் பெற இந்திராவின் கோட்பாட்டுக்கு எதிரான நிலை எடுக்கிறது.
சுதந்திர சந்தை என்ற நிலை கொண்டிருந்த கார்ப்பரேட்டுகள் அப்போது வெளிநாட்டுப் போட்டியை தடுக்கவும் உறுதி பூண்டிருந்தனர். ஜின்னாவின் பேரனான நுஸ்லி வாடியா (பாம்பே டையிங்) தான் வெளிப்படையாக, முதல்முதலாக ஜன சங்க் க்கு ஆதரவு அளித்தார். ஏராளமான நிதியுதவியும் அளித்தார்.
பின்பு சோவியத் யூனியன் வீழ்ச்சி, உலகமயம் தாராளமயம் என்று வந்த பிறகு நாட்டை அன்னிய முதலீட்டுக்குத் திறந்து விடுதல், மினிமம் கவர்ன்மெண்ட் என்பதெல்லாம் ஜன சங்க் கின் புதிய அவதாரமான பாரதிய ஜனதாவின் நோக்கங்களுடன் சேர்ந்து விட்டது.
வாஜ்பாய் நாடு முழுவதும் வணிகத்துக்கு ஏற்ற நெடுஞ்சாலைகள் அமைப்பதன் மூலம் உள்நாட்டுச் சந்தைகளையும், உற்பத்தி மையங்களையும் இணைத்தார் என்கிறார் நந்தன் நிலகேனி.
மோடி அடுத்த கட்டத்துக்குப் போகிறார். அரசு பாதுகாப்பு வெளியுறவு ஆகியவற்றைத் தவிர மற்ற வேலைகளை மேற்கொள்ளக் கூடாது என்பதுதான் பி ஜேபியின் தற்போதைய இறுதி நோக்கம்.
எனவே விவசாயிகளுக்கான மண்டிகளை அரசு நிர்வகிக்க கூடாது, விலை நிர்ணயம் போன்றவற்றை அரசு செய்யக் கூடாது அதை மார்க்கெட்டே தீர்மானிக்கும் என்பதுதான் மோடி அரசின் கோட்பாடு.
கார்ப்பரேட்டுகளுக்கு சலுகை என்பது அரசு கார்ப்பரேட்டுகளின் எடுபிடி என்பதால் அல்ல. மார்க்கெட் சுற்றுச் சூழல் என்பதைப் போல இது ஒரு கோட்பாடு.
கார்பரேட்டுகளுக்கு சலுகைகள் அளித்து உற்பத்தியைப் பெருக்குவதன் மூலம் இப்போது தான் எதிர்கொண்டிருக்கும் கடும் நெருக்கடியை அரசு கடக்க முயல்கிறது. ஆனால் மக்களின் வாங்கும் திறன் வீழ்ச்சி அடைந்துள்ளதால் கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகள் அளித்தாலும் மார்க்கெட்டுகள் புத்துயிர் பெறுவது கடினம் என்கிறார்கள். மேல் நடுத்தர வர்க்கத்துக்கு சலுகைகள் அளித்து பணம் சந்தையில் புழங்க வைக்க அரசு முயல்கிறது.
மணீச்சித்திர தாழ் படத்தில் (தமிழில் சந்திரமுகி) பிளவுண்ட மனநிலை கொண்ட சோபனாவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பின்னால் ஒரு காரணம் இருப்பதைப் போல . . . அரசு தனது கோட்பாடுகளைக் கொண்டே நெருக்கடிகளைக் கடக்க முயல்கிறது.
Vinay Sitapati எழுதிய Jugalbandi: The BJP Before Modi நூலில் ஓரிரு அத்தியாயங்களை bloombergquint.comஇல் மேய முடிந்தது. சுவாரஸ்யமான நூல்.
இந்த அமெரிக்காவில் படித்துவிட்டு வருபவர்கள் எல்லாம் முழு சந்திரமுகியாகவே மாறிவிடுவது ஆச்சரியமாக இருக்கிறது. ஏறக்குறைய இதே கால கட்டத்தில் அங்கே பேராசிரியர்களாக இருந்த இந்தியர்கள் சிலர் போஸ்ட் மாடர்னிஸ்டுகள் ஆகி கம்யூனிச எதிரிப்பு, பெருங்கட்சி எதிர்ப்பு, புதிய வரலாறு எழுதுதல் என்று பின்னி எடுத்ததையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
— எழுத்தாளர் இரா. முருகவேள் ஃபேஸ்புக் குறிப்பு
தன்னறம் இலக்கிய விருதின் முதல் விருது எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர் யூமா வாசுகிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த விருது, தமிழ்ச்சூழலில் அவருடைய இத்தனைக்கால படைப்புமுகத்திற்காக வழங்கப்படுகிறது. பொதுவாக, இலக்கியச்சூழலில் ஒருசில படைப்பாளிகளே அடுத்த தலைமுறைக்கான ஆசிரியர்களாக எழும் அகத்தகுதி உடையவர்களாக மாறிநிற்கிறார்கள். அப்படி ஒரு வரிசையை நாம் உருவாக்கிக் கொண்டால், அதில் தவிர்க்கமுடியாத படைப்பாளியாக யூமா வாசுகி தனித்துநிற்பார்.” —விருது அறிவிப்புக் குறிப்பில் ஒரு பகுதி
இத்துடன் வெளியாகியுள்ள யூமாவின் இந்த அனுபவநினைவுகளின் உரையாடல் கண்டிப்பாக பார்க்கப்பட வேண்டியது!
எழுத்தாளர் யூமா வாசுகி அனுபவநினைவுகளின் வாழ்வுரையாடல்
“teachable and destined for posterity”: ஜார்ஜ் சாண்டர்ஸ் சிறுகதை பரிந்துரைகள்
அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் சாண்டர்ஸ் Los Angeles Review of Books இதழுக்கு அளித்த நேர்காணலில் சமகால அமெரிக்கச் சிறுகதைகள் பற்றிய கேள்விக்கு பரிந்துரைத்துள்ள சிறுகதைகளின் பட்டியல். (சிறுகதை தலைப்பில் சொடுக்கி வாசிக்கலாம்)
Stuart Dybek, “Hot Ice” (from The Coast of Chicago)
Alice Munro, “Dance of the Happy Shades” (from Dance of the Happy Shades: And Other Stories)
Carolyn Ferrell, “Don’t Erase Me” (from Don’t Erase Me: Stories)
Tobias Wolff, “Bullet in the Brain” (from Our Story Begins: New and Selected Stories)
Ha Jin, “Alive” (from The Bridegroom: Stories)
Robert Stone, “Helping” (from Bear and his Daughter)
Toni Cade Bambara, “Gorilla, My Love” (from Gorilla, My Love)
Miranda July, “Roy Spivey” (published in The New Yorker)
கனலி கலை இலக்கிய இணையதளத்தின் ‘சூழலியல்-காலநிலைச் சிறப்பிதழ்’ பிப்ரவரி 15 அன்று வெளியாகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
Poster Super ARUN, good creativity with timeline