காலநிலை மாற்றம்: ஒரு கருத்துக் கணிப்பு
நம் காலத்தின் அதிதீவிரப் பிரச்சினையாக காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இப்பிரச்சினையின் விளைவுகள் உலகின் பல பகுதிகளில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட நிகழ்வுகள் இந்தியாவிலும், தமிழகத்திலும்கூட தலைகாட்டத் தொடங்கிவிட்டன. சர்வதேச ஊடகங்கள் இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, இதுகுறித்த செய்திகளைத் தவிர்க்கக்கூடாத விஷயங்களாகத் தொடர்ந்து வழங்கத் தொடங்கிவிட்டன. இந்தப் பின்னணியில் தமிழ் ஊடகங்கள் இப்பிரச்சினையை எப்படி அணுகுகின்றன, அணுக வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்களின் எண்ணத்தை அறியவே இந்தச் சிறு கருத்துக் கணிப்பு.
நண்பர்கள் அவசியம் இக் கருத்துக் கணிப்பில் பங்கெடுப்பதுடன், அதிகம் பேரைச் சென்றடையும் வகையில் இதைப் பரவலாகப் பகிர்வதன் மூலம் தமிழ் இதழியலில் ஒரு புதிய தொடக்கத்துக்கு வித்திட வேண்டும் என்று வேண்டுகிறேன். நன்றி!